தமிழ்நாடு

பாவம் தமிழ்நாடு மீனவர்கள்.. ஆட்டம்போடும் இலங்கை கடற்படை! மத்திய அரசை கோர்த்துவிட்ட ராமதாஸ் – அட ஆமா?

பாவம் தமிழ்நாடு மீனவர்கள்.. ஆட்டம்போடும் இலங்கை கடற்படை! மத்திய அரசை கோர்த்துவிட்ட ராமதாஸ் – அட ஆமா? சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். துகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கைக் கடற்படையினரின் மனிதநேயமற்ற இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற முதல் நாளிலேயே இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கடந்த 19 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உள்நோக்கத்துடன் எல்லை தாண்டவில்லை; அவர்களின் படகு பழுதடைந்ததால் தான் காற்றில் அடித்துச் செல்லப்பட்டனர் என்பதை தெரிவித்தும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது. அவர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்பாகவே அடுத்து 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய தொடர் அத்துமீறலை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button