ஆந்திரா

முன்னாள் துணை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்த மேடை.. அலறிய கட்சி தொண்டர்கள்!

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னாள் எம்.பி மாகந்தி பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடம் என்ற இடத்தில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றினார்

நிம்மகாயல சின்னராஜப்பா பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உக்கிரமாக வீசிய காற்றில் மேடை மளமளவென சரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button